அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை

THANJAVUR_0__3.1432739926

தஞ்சை என்றவுடன் ”விண்ணுயர்ந்த கோபுரம் கொண்ட பெரிய கோயில்” என்றும் கற்கோயில் என்றும் ”கருவறை கோபுரம் கொண்ட கோயில்” என்றும் நமக்கு தோன்றும். அதே போன்று கருவறை கோபுரத்துக்கு மேலுள்ள ஒற்றை கல்லை எப்படி வைத்தனர் என்றும் வியந்து உலகமே பார்க்கும் பொழுது.

அமர் சித்ர கதா (Amar chitra Katha) என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தில் (அம்புலிமாமா போன்று) தஞ்சை கோயிலின் வரலாற்றை மிகவும் கொச்சைப்படுத்தியும், அருவருக்கும் தன்மையுடனும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அந்த புத்தகத்தில் உள்ள செய்தி பின் வருமாறு

அருள் மொழி தேவன் எனும் இராசராச சோழன் சேர நாடு, இலங்கை போன்ற நாடுகளை வென்ற பிறகு இராசராசன் நோய்வாய்பட்டான் அதுவும் அவனுக்கு தொழுநோய் தாக்கியது. அந்த நோய் தீர பரிகாரமாக பெரிய கோபுரத்தை உடைய கோயிலை கட்டினால் தான் நோய் தீரும் என்று கூறினர். அதே போன்று இராசராசனும் வேண்டியதால் அவன் நோய் தீர்ந்தது. அவன் வேண்டிய படியே இன்று விண்ணுயர நிற்கும் பெரிய கோயில் கட்டப்பட்டதாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கிறது.

இது ஒரு பானை சோறு அல்ல, இதே போன்றுதான் தமிழ் மன்னர்களாகட்டும் , அருளாளர்களாகட்டும் அவர்களுக்கு அருவருப்பான நோய் ஏற்ப்பட்டதாக கதை கட்டிவிடுகின்றனர். உதாரணத்துக்கு அருணகிரிநாதர் உறங்கும் பொழுது அகிலாண்டேசுவரி அவர் வாயில் எச்சில் துப்பியதால் தான் அவர் பாட ஆரம்பித்தார் என்றும், அதே போன்று பிற்காலத்தில் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் ஏற்ப்பட்ட பெருநோயால் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் என்று கதை கூறுவர்.சுந்தரரை பற்றிய செய்திகளும் தஞ்சாவூர் பற்றிய அமர் சித்ர கதாவில் உள்ளது.

அமர் சித்ர கதையில் உள்ள, இராசராசனை பற்றிய கட்டுக்கதைகளை, ஆபாச செய்திகளை படித்த பிறகாவது தமிழ்வுணர்வு கொண்ட ஒவ்வொருவரும், அமர் சித்ர கதாவிற்கு தங்களின் கண்டனங்களையும், உரிய நடவடிக்கையை எடுக்க அழுத்தம் தரப்பட வேண்டும்.

பேசுகின்ற மொழியால் ஒரே இனத்தவன் என்ற உணர்வின்றி சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடித்து கொண்டு அழிந்து போவதால் தான் கூத்தாடிகள் நம்மை இருட்டடிப்பு செய்கின்றனர் என்பதை உணரும் காலம் பொருத்தே நமக்கு தன்மானமும் தன்னம்பிக்கையும் விழிச்சி பெறும்.

உலகத்திற்கே தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை,  அரசியல் வாழ்க்கை நீதிகளையும், அரசியல் நெறிகளையும், கலைகளையும், நாகரீகத்தையும் காலங்கள் தோறும் பலராலும் எழுதப்படும் ஒரு மொழியின் வரலாற்றை, இனத்தின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் நிலையில் நாம் வாழுகின்றோம்.

பெயருக்காக தமிழ் வாழ்க என்றும், தனிமனித ஆதாயத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தமிழை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தப்போகின்றனரோ!!!. இன்றுள்ள பத்திரிகைகளும் தமிழுணர்வு, தமிழரின் மரியாதை பற்றி பாரா முகம் காட்டக்கூடிய நிலையில் தான் உள்ளது.

அமர் சித்ர கதாவில் வெளிவந்துள்ள புத்தகத்தின் பிறதி.

Thanjavur-Ack-1

Thanjavur-Ack-2

 

One thought on “அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை

Leave a comment